Thirukural

88. பகைத்திறந்தெரிதல்

871

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

872

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.

873

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.

874

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு.

875

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

876

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.

877

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.

878

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.

879

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.

880

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.