|
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தன் துணை இன்று- தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் பகை இரண்டு- தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் ஒருவன் -தான் தனியனாகவும் இருப்பவன் ; அவற்றின் ஒன்று இன் துணையாகக்கொள்க- அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க. தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும்.உண்மையான துணையாகச் செய்து கொள்ள வென்பார் இன்றுணையா என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஆக என்னும் வினையெச்ச வீறு ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. கொள்கவற்றின் என்பதில் அகரந்தொக்கது. இவ்விரு குறளாலும் நட்பாக்கக் கூடியபகை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(இது எல்லாருக்கும் நல்ல குணம். முக்கியமாகத்துணைப் பலம் இல்லாமல் தனியனாக இருப்பவன் கவனிக்கவேண்டியது.) துணை வலிமை இல்லாமல் தனியாக இருக்கிற ஒருவன், போர் மூண்டுவிட்டால் துணைவர்களையாவது தேடிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களையேனும் நட்பாக்கிக் கொள்ளச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இன்துணையாகக் கொள்க அவற்றின் ஒன்று தனக்கு உதவியாக இருக்கும், துண்பம் கொடுக்கும் பகை இரண்டாக இருந்தால் ஒருவனாக இருக்கும் தான் அப்பகை இரண்டினுள் பொருத்தமான ஒன்றினை அப்போதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்ளுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தனக்குத் துணைவர் யாரும் இல்லாமல், தனக்குப் பகைவரென இருவர் இருக்க, அவருள் ஒருவரைத் தனக்குத் துணையாக்கிக் கொள்ள முயலுதல் நன்று.
|
|
Translation
|
|
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
|
|
Explanation
|
|
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
|
|
Transliteration
|
|
Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan
Indhunaiyaak Kolkavatrin Ondru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|