|
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அழிவின்கண்- இருபகைவருள் ஒருவனால் தோல்வி நேர்ந்த விடத்து; தேறினும் தேறாவிடினும் - இன்னொரு பகைவனைத் தெளிந்தானாயினும் ; தெளிந்திலனாயினும் , தேறான் பகான் விடல் -அவனொடு சேராமலும் அவனைவிட்டு நீங்காமலும் இடைநிலையில் நின்றுகொள்க. முன்தெளிந்தானாயினும் அப்பொழுது கூடாதிருக்க என்றது உடனின்று கெடுக்காதிருத்தற் பொருட்டு. தெளிந்திலனாயினும் அப்பொழுது நீங்காதிருக்க என்றது, வெளிப்படைப் பகையால் மேலுந்தனக்குக் கேடு வராதிருத்தற் பொருட்டு. தேறான் பகான் எதிர்மறை முற்றெச்சங்கள். பகாஅன் இசைநிறையளபெடை. இக்குறளால் பகையை நொதுமலாக்கல் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதையும் சண்டை ஆரம்பிக்கும் முன்னால் செய்ய வேண்டும்.) பகைவனை நண்பனாக்கிக் கொள்ளவதா அல்லவா என்பதைப் போர் மூண்டு சேத முண்டானால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுவதை விட்டுவிட வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவனை முன்பு தெளிந்து அறிந்து இருந் தாலும் அல்லது தெளிந்து அறியாமல் இருந்தாலும் தனக்கு அழிவு வந்துற்றபோது அப்பகைவனைக் கூடாமலும் நீக்கிவைக்காமலும் இடையே விட்டுவைக்க வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தெரிந்து இருந்தாலும், தெரியாமல் இருந்தாலும் துன்பம் வருகின்ற பொழுது ஒருவரைப்பற்றி ஆராயவோ, பகைமை பாராட்டிக் கொள்ளவோ கூடாது.
|
|
Translation
|
|
Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.
|
|
Explanation
|
|
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
|
|
Transliteration
|
|
Thera�num Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|