Thirukural

89. உட்பகை

881

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்.

882

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு.

883

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்.

884

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.

885

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.

886

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.

887

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.

888

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி.

889

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு.

890

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.