|
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும். இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை ஒருவனுக்கு, சிறப்பாக அரசனுக்கு, உண்டாகுமாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அது அவனுக்கு இறக்குந் தன்மையான பல குற்றத்தையும் உண்டுபண்ணும். உட்பகையுற்றவன் அரசனாயின், புறப்பகைக்குத் துணையாய் நின்று காட்டிக் கொடுத்தலும் தானேகொல்லுதலும் அமைச்சு முதலிய உறுப்புக்களைக் கெடுத்தலும், உட்பகையால் வரும் ஏதங்களாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உறவு முறை உள்ளவனாக (எந்த நேரத்திலும் தன் வீட்டுக்குள் வரப்போக) இருக்கக் கூடியவன் உட்பகையாகி விட்டால் உயிருக்கே அபாயம் வரக் கூடிய துன்பங்களும் உண்டாகிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புறத்தில் உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை வேந்தனுக்கு உண்டாகிவிட்டால் அது அவனுக்கு இறத்தல் முதலிய குற்றங்களையெல்லாம் தந்துவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உறவுக்குள் உட்பகை தோன்றின் அது ஒருவனுக்கு அழிவைத் தருவதான பல துன்பங்களைத் தரும்.
|
|
Translation
|
|
Amid one's relatives if hidden hath arise,
'Twill hurt inflict in deadly wise.
|
|
Explanation
|
|
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.
|
|
Transliteration
|
|
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|