|
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒன்றியார் கண் ஒன்றாமைபடின் - தனக்கு உள்ளானவரிடத்திலேயே பகைமை தோன்றுமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - ஒருவனுக்கு இறவாமை கூடுதல் எக்காலத்திலும் அரிதாம். அரசனாயின் பொருள் படை நாடு நட்பு முதலியவற்றாலும், பிறனாயின் பொருள் சுற்றம் ஏவல் முதலியவற்றாலும், பெரியவனான காலத்தும் என்பார் ' எஞ்ஞான்றும் ' என்றார். ' ஒன்றாமை யொன்றியார் ' உள்முரண் (Oxymoron) இந் நான்கு குறளாலும் உட்பகையால் தனிப்பட்டவனுக்கும் ஒரு குடும்பத்தலைவனுக்கும் அரசனுக்கும் வருந்தீங்கு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒன்றேபோல் சேர்ந்து காரியம் செய்ய வேண்டியவர் களுக்குள் உட்பகை தோன்றிவிட்டால் அழிவு வராமல் இருக்கவே முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைமை தனக்கு உள்ளாயினாரிடத்திலேயே உண்டாகிவிடுமானால் அரசனுக்கு இறவாமை என்பது. முடியாததாகிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உடன் இருப்பவர்களுக்குள் உடன்படாதவகையில் உட்பகை தோன்றின் ஒருவன் தன்னை அழிவிலிருந்து காத்துக் கொள்ளுதல் அரிது.
|
|
Translation
|
|
If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.
|
|
Explanation
|
|
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
|
|
Transliteration
|
|
Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum
Pondraamai Ondral Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|