Thirukural

84. பேதைமை

831

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.

832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.

833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்.

834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல்.

835

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.

836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.

837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.

838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின்.

839

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.

840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.