Thirukural

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல். கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.
கலைஞர் உரை:
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
முட்டாள்தனங்களிளெல்லாம் அதிக முட்டாள்தனம் எதுவென்றால், தீமையான காரியத்திலேயே அதிக ஆசைகொண்டு நடந்துகொள்வது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பேதைமைகளுக்கெல்லாம் மிகுந்த பேதைமை என்னவென்றால், தன்னால் முடியாத செயல்களில் மிக்க விருப்பத்தினைக் கொண்டு செய்தலாகும்.
தமிழ்க்குழவி உரை:
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது யாதெனில் தகாத செயல்களைச் செய்வதில் ஆர்வம் உடையதாய் இருத்தல்.
Translation
'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting prove.
Explanation
anation: The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
Transliteration
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai Kaiyalla Thankat Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 832