Thirukural

131. புலவி

1301

புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது

1302

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்

1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்

1304

ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று

1305

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து

1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று

1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று

1308

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி

1309

நீரும் நிழல தினிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது

1310

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா