|
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து.
இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்
புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் நொந்து சொல்லியது.)
நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி - இவர் நம் செயல் பற்றி நொந்தாரென்று அந்நோவினையறியும் அன்புடையார் இல்லாதவிடத்து ; நோதல் எவன் - ஒருவர் நொந்து என்ன பயன் ?
இவள் நம் காதலியல்லள் .ஆகலால் நம் நோவறியாள் . ஆகவே, நாம் நோவதாற் பயனில்லை யெனத் தன் ஆற்றாமையுணர்த்தியவாறு. அறிதல்-அறிந்து ஊடல் தீர்தல் மற்று-அசைநிலை .
|
|
கலைஞர் உரை:
|
|
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர்
இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் வேதனைகளை உணர்ந்து என் பிணக்கத்தை நீக்கிப் புணர்ந்து என் துன்பங்களைப் போக்கவேண்டுமே என்ற இரக்கம் என் காதலருக்கு இல்லாதபோது நான் பிணங்கி வெறுந் துன்பமடைவதில் என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நம்பொருட்டு வேதனையுற்றார் என்று அந்த வேதனையினை அறியும் அன்பில்லாத காதலரைப் பெறாதபோது, ஒருவர் நொந்து கொள்ளுவதால் பயன் என்ன?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நம்மால் இவர் வருந்துகிறார் என்று அறிய காதலர் அருகில் இல்லாத பொழுது வருந்துவதால் என்ன பயனும் இல்லை.
|
|
Translation
|
|
What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures
|
|
Explanation
|
|
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
|
|
Transliteration
|
|
Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum
Kaadhalar Illaa Vazhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|