Thirukural

38. ஊழ்

371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.

372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.

373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.

374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.

375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.

376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.

377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.

379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.

380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.