Thirukural

97. மானம்

961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல்.

962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.

963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.

964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.

965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.

966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை.

967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.

968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.

969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.

970

இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.