Thirukural

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,் விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
தேவநேயப் பாவாணர் உரை:
கலைஞர் உரை:
சாலமன் பாப்பையா உரை:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனிதர்கள் மானம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து தவறி விட்டால் தலையிலிருந்து வேரோடு விழுந்துவிட்ட மயிருக்குச் சமானமாக மதிப்பாரற்றுப் போவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நற்குடியில் பிறந்த மக்கள் தம்முடைய உயர்ந்த நிலையைவிட்டுத் தாழ்ந்தபோது தலையைவிட்டு நீங்கி வீழ்ந்த மயிரினை ஒப்பர்.
தமிழ்க்குழவி உரை:
மனிதர்கள் உயர்ந்த தம் பண்புகளிலிருந்து இழிந்து விடுவார்களாயின், தலையிலிருந்து உதிர்ந்து விடும் மயிருக்கு ஒப்பாகவே கருதப்படுவர்.
Translation
Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth.
Explanation
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
Transliteration
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar Nilaiyin Izhindhak Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 964