|
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சீரொடு பேராண்மை வேண்டுபவர்- புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; சீரினும் சீர் அல்ல செய்யார்- புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார். ஏகாரம் தேற்றம். எந்நிலைமையிலுந் தளராத மனத்திண்மை யுடைமையால் மானம் பேராண்மை யெனப் பட்டது. சீரினுஞ் சீரல்ல செய்தல் அன்முறையாய்க் கொள்ளையடித்து அறச்சாலை நிறுவுதல் போல்வது.
|
|
கலைஞர் உரை:
|
|
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதுமட்டுமல்ல) சீரும் சிறப்பும் தரக்கூடிய செல்வம் வருவதானாலும் புகழ் தரக்கூடிய பேராண்மையான மானத்தைக் கருதுகிறவர்கள் நேர்மையற்ற காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புகழுடனே மானத்தினை நிலை நாட்டுதலை விரும்புகிறவர்கள் புகழினை நாடும்போதும் தம் குடிமைக்கு இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறப்பும் பெருமையும் வேண்டுகின்ற பெருந்தகையாளர்கள் சிறுமையடையும் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
|
|
Translation
|
|
Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.
|
|
Explanation
|
|
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
|
|
Transliteration
|
|
Seerinum Seeralla Seyyaare Seerotu
Peraanmai Ventu Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|