Thirukural

44. குற்றங்கடிதல்

431

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.

432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.

433

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.

434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை.

435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.

436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.

437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.

438

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.

439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.

440

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.