|
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பழிநாணுவார் -பழிக்கு அஞ்சுவார்; தினைத்துணை ஆம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் -தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
தினை, பனை, என்பன அளவுப்பெயர்கள்; இங்குச் சிறுமை பெருமை பற்றியே வந்தன. உம்மை இழிவு சிறப்பு. 'குற்றம் வகுப் பொருமை. கொள்ளுதல் கொண்டு நீக்குதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக்
கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குற்றம் செய்வதில் பெரிய குற்றம், சிறிய குற்றம் என்பதில்லை.) பழிக்கு அஞ்சுகிறவர்கள் தினையளவு சிறிய குற்றம் நேர்ந்துவிட்டாலும் பனையளவு மிகப் பெரிய குற்றம் வந்துவிட்டதாக வருத்தப்படுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பழிக்கு நான்முற்று அஞ்சுபவர்கள் தினையளவு சிறிதான குற்றமானது தங்களிடத்தில் உண்டானாலும் அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தினையளவு குற்றம் நேர்ந்தாலும் அதனைப் பனையளவாகக் கருதிப் பழிகளுக்கு அஞ்சும் பண்பாளர்கள் வருந்துவர்.
|
|
Translation
|
|
Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.
|
|
Explanation
|
|
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.
|
|
Transliteration
|
|
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak
Kolvar Pazhinaanu Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|