|
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கருவியான் காலம் அறிந்து செயின் - சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; அருவினை என்ப உளவோ - அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ ? இல்லை .
கருவிகள் ஐவகையாற்றலும் நால்வகை ஆம்புடைகளுமாம் . அவற்றொடு காலமும் வேண்டுமென்பதற்குக் 'கருவியான்' என்றார் . 'உளவோ' என்னும் வினா எதிர்மறை விடையை அவாவுவது .
|
|
கலைஞர் உரை:
|
|
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து
செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒரு காரியத்தைச் செய்து முடிக்க அவசியமான கருவிகளுக்குள்) தகுந்த காலம் என்பதும் ஒரு கருவியாகும். அதை அறிந்து செய்தால் முடியாத காரியங்களும் உண்டா? இல்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அவற்றை முடித்ததற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செய்தற்குரிய கருவிகளைக் கொண்டு செய்தற்குரிய காலத்தை அறிந்து ஒருவன் செயல்படுவானாயின் அவனுக்கு அரிதான செயல் என்று எதுவுமில்லை.
|
|
Translation
|
|
Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?.
|
|
Explanation
|
|
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.
|
|
Transliteration
|
|
Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|