|
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவற்கு; இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமை இழிவாகாது. உள்ளத்திற்கு உறுதியுண்டாக்குதலின், சால்பு உரமாயிற்று. இன்மை பொருளின்மை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" (மூதுரை,4) என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சான்றாண்மை என்னும் வல்லமையுள்ள ஒருவனுக்கு வறுமை இகழ்ச்சி தரக்கூடியதன்று.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சான்றாண்மை என்று சொல்லப்படும் வலிமையானது உண்டாகப் பெற்றால், ஒருவனுக்கு வறுமை யானது இழிவுடையதாகாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சான்றாண்மை என்னும் ஆற்றல் மிக்க பண்பு ஒருவரிடம் இருக்குமெனில், இல்லாமை ஆகிய வறுமை இழிவாகக் கருதப்படாது.
|
|
Translation
|
|
To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.
|
|
Explanation
|
|
Poverty is no disgrace to one who abounds in good qualities.
|
|
Transliteration
|
|
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|