Thirukural

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.
தேவநேயப் பாவாணர் உரை:
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர். சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து.கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர். சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து.
கலைஞர் உரை:
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எல்லா நல்ல குணங்களும் சேர்ந்த நிறைகுணம் என்னும்) சான்றாண்மையுள்ளவர்கள் தம்முடைய அறிவுக்கு நல்ல காரியம் என்று தெரிகிற எல்லாக் காரியங்களையும் கட்டாயமாகச் செய்யவேண்டிய கடமைகளாகவே செய்வார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தமக்குச் சிறந்தது என்று அறிந்து சான்றாண் மையினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு நல்ல குணங் கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று நூலோர் சொல்லுவர்.
தமிழ்க்குழவி உரை:
தன்கடமையை உணர்ந்து சான்றாண்மைப் பண்புகளை மேற்கொண்டு ஒழுகுபவர்களுக்கு நற்செயல்கள் யாவுமே அவர்கள் தம் கடமையாகும்.
Translation
All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect way.
Explanation
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
Transliteration
Katanenpa Nallavai Ellaam Katanarindhu Saandraanmai Merkol Pavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 981