|
சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிறப்பும் தான் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண்படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.(தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம். சீரல்லவர்- பெரியரல்லர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறப்பும் தான்- பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றின் மிகுதிதானும்; சீர் அல்லவர் கண் படின் - தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதியில்லாத சிறியோரிடம் சேரின் ; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம். "உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல் ." இவ்விரு குறளாலும் சிறியோ ரியல்பு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சிறப்புங்கூடத் தகுதியற்றவர்களுக்கு வந்துவிட்டால் அது அதிக்கிரமங்களைச் செய்வதே வேலையாக இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சிறப்பானவை, தகாத சிறியவர்களிடத்தில் இருந்து விடுமானால் அவை செருக்கு மிகுந்த செய்யும் தொழில்களையே செய்யும் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறப்பான வாழ்க்கை நிலை, தகுதியில்லாதவர்களுக்கு வாய்த்து விடின் வரம்பு மீறிய செயல்களைச் செய்ய முற்படுவர்
|
|
Translation
|
|
Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.
|
|
Explanation
|
|
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
|
|
Transliteration
|
|
Irappe Purindha Thozhitraam Sirappundhaan
Seeral Lavarkan Patin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|