|
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்றுவோம் என்னும் குறிக்கோள்; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - அந்நால்வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை. இம்மனப்பான்மை அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகிய வற்றால் உண்டாவது. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தம்மினும் பெரியவர்களை அணுகித் தமக்குத் தெரியாத வற்றைத் தெரிந்துகொள்ளும் எண்ணம், சிறுமனம் உள்ளவர் களிடத்தில் இருக்காது. (பெருந்தன்மையான மனம் படைத்தவர் களிடத்தில்தான் இருக்கும்.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஆற்றல் மிகுந்த பெரியோரை வழிபட்டு அவர் இயல்பினைக் கைக்கொள்ளுவோம் என்னும் கருத்து, மற்றைச் சிறியோர் மனத்தில் உண்டாகாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெருமைக்குரியவர்களைப் போற்றி வாழ்கின்ற உயர்ந்த நோக்கம் சிறுமைக்குரியவர்களின் உணர்வில் தோன்றாது.
|
|
Translation
|
|
'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.
|
|
Explanation
|
|
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
|
|
Transliteration
|
|
Siriyaar Unarchchiyul Illai Periyaaraip
Penikkol Vemennum Nokku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|