|
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒருவன் தன் மனைவிக்குப் பணியும் ஆண்மையின்மை; எப்போதும், அஃதில்லாத நல்லாடவருடன் பழகும்போது அவனுக்கு நாணத்தைப் பிறப்பிக்கும்.
|
|
கலைஞர் உரை:
|
|
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மனைவி மீதுள்ள ஆசையினால் அவள் சொன்னதை யெல்லாம் செய்கிறவன் தலைகுனிய நேரும்.) மனைவிக்குக் கீழ்ப்படிகிற முறை கெட்ட தன்மை, நல்லவர்கள் மத்தியில் போவதற்கே கூச்சமுண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் தனது இல்லாளிடத்தில் தாழ்ந் திருப்பதற்குக் காரணமான அச்சம், அது இல்லாதவராகிய நல்லாரிடம் செல்லுங்கால் நாணுறுதலை எக்காலத்திலும் அவனுக்குக் கொடுக்கும்
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன்மனைவியிடம் சுகபோகத்திற்காக பணிந்து நடக்கும் பண்பில்லாத தன்மை எப்போதும் நல்லவர் மத்தியில் நாணித் தலைகுனிய வைக்கும்.
|
|
Translation
|
|
Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.
|
|
Explanation
|
|
The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
|
|
Transliteration
|
|
Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum
Nallaarul Naanuth Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|