|
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது. (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம். இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும் இல்லாயின்-வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத லெறுப்பும் ஏழைமையும் தனக்கில்லாவிடின்; படை வெல்லும்-படை பகைவரை வெல்லும். சிறுத்தல் படை மறவர் விலகுவதால் நேர்வது. இச்சிறுமையும் வறுமையும் அரசன் பொருள் கொடாமையால் வருவன. 'செல்லாத்துணி' பெண்டிரை அரசன் கைப்பற்றுவதாலும் பிற இழிசெயல்கள் செய்வதாலும் ஏற்படுவது. இம் மூன்றும் உள்ளவிடத்து அரசன் மீது அன்பு கொண்டு ஊக்கமாய்ப் பொரா ராதலால், இல்லாயின் வெல்லும், என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும் இல்லாயின்-வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத லெறுப்பும் ஏழைமையும் தனக்கில்லாவிடின்; படை வெல்லும்-படை பகைவரை வெல்லும். சிறுத்தல் படை மறவர் விலகுவதால் நேர்வது. இச்சிறுமையும் வறுமையும் அரசன் பொருள் கொடாமையால் வருவன. 'செல்லாத்துணி' பெண்டிரை அரசன் கைப்பற்றுவதாலும் பிற இழிசெயல்கள் செய்வதாலும் ஏற்படுவது. இம் மூன்றும் உள்ளவிடத்து அரசன் மீது அன்பு கொண்டு ஊக்கமாய்ப் பொரா ராதலால், இல்லாயின் வெல்லும், என்றார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேற்சொன்ன அமைவுகளெல்லாம் பொருந்தி) போர்ச் சேவகர்களின் எண்ணிக்கை மிகுந்திருந்தாலும் சரியான படைத் தலைவர்கள் இல்லாவிடில் சேனை பயனற்றதாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
போரில் நிலைத்து நிற்கும் வீரர் பலரை மிகுதியாகப் பெற்றிருந்தாலும் தனக்குத் தலைவர்களான தலைமை வீரர்கள் இல்லாதபோது சேனை நிற்காது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
படைவீரர்கள், நிறைய இருப்பினும், அப்படையை நடத்திச் செல்பவர் திறமையில்லாதவராய் இருப்பின் போரில் வெற்றி பெற இயலாது.
|
|
Translation
|
|
Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.
|
|
Explanation
|
|
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.
|
|
Transliteration
|
|
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|