|
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர்.
இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் -அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர்.
முன்னறிதல் எண்ணியறிதலும் எண்ணாதறிதலும் என இருவகை. எண்ணியறிதல் பொதுவகைப்பட்ட அறிஞர் செயல்; எண்ணா தறிதல் இறைவனால் முற்காணியர்க்கு (Prophets) அளிக்கப் பட்ட ஈவு.
"பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்" என்று மணக் குடவபரிப்பெருமாளரும் , "அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்". என்று பரிதியாரும், "உலகத்து அறிவுடையோர் ----------- தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே." என்று காளிங்கரும், உரைப்பர். தமக்கு நன்மையாவதை அறிவது தன்னல வியல்பேயன்றி அறிவுடைமையாகாது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென
அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க
மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) அறிவுடையவர்கள் எதனால் எது வரும் என்று, பின்னால் வரக்கூடியதை முன்னால் ஆலோசித்தறிந்து எச்சரிக்கை கொள்வார்கள். அப்படி முன் யோசனை செய்யத் தெரியாதவர்கள் அறிவில்லாதவர்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறிவுடையார் பின்னர் வருவதை அறிய வல்லவராவர், அறிவில்லாதவர்கள் அவ்வாறு பின்னர் வர இருப்பதனை முன்னே அறிந்துகாள்ள முடியாதவர்கள் ஆவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறிவுடையார் நாளை நடக்க விருப்பதை இன்றே அறிவர். அறிவிலாதார் அத்தகையத்திறன் இல்லாதவரே.
|
|
Translation
|
|
The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.
|
|
Explanation
|
|
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.
|
|
Transliteration
|
|
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|