|
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும்.
இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பல்லாரகத்துப் பயன் சாராப் பண்பு இல்சொல் - ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - நேர்மையொடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும்.
சொற் பண்புகள் ஓசையினிமை , இலக்கண வழுவின்மை, பொருள் நன்மை முதலியன. சொல்லும் என்பது சொல்லெச்சம். 'சாரா' இரண்டனுள் முன்னது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பின்னது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல்
மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறருக்கு அலுப்புண்டாக்குவதோடு அவனுக்கும் தீமை யுண்டாக்கும்.) பலபேர் கூடிய சபையில் பயனற்றதும் தகுதி யற்றதுமான பேச்சைப் பேசுவது கேட்கிறவர்களுடைய இன்பத்தைக் கெடுத்துப் பேசுகின்றவனுக்கு வரக்கூடிய நன்மைகளையும் தடுத்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்பயன் சேராத குணமில்லாத சொற்களைப் பலரிடத்திலும் ஒருவன் சொல்லுவானானால், அப்படிப் பட்டவனை, அவை நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பலர்கூடியிருக்கும் அவையில் ஒருவன் பயன்யாதுமில்லாதப் பண்பற்ற சொற்களைப் பேசிக் கொண்டிருப்பானாயின் அவை எந்த நன்மையையும் நல்காததாய் தகுதியிழக்கும்.
|
|
Translation
|
|
Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.
|
|
Explanation
|
|
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
|
|
Transliteration
|
|
Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap
Panpilsol Pallaa Rakaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|