|
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.f
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்
இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நீர்மை உடையார் பயன் இல சொலின் - இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் -அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கிவிடும்.
'சொலின்' என்னும் நிலைப்பாட்டு வினையெச்சம் சொல்லாமையை உணர்த்திற்று.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்
அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல; கல்வி கேள்விகள் நிறைந்து) மேலான நிலைமையிலுள்ளவர்களானாலும், பல பேர் கூடிய சபையில் அவர்கள் வீண் வார்த்தைகளைப் பேசி விடுவார்களானால், அப்போதே அவர்களுடைய சீரும் சிறப்பும் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்பண்பே உடையவர்கள் பயனில்லாத சொற்களைப் பேசத் தலைப்படுவார்களாயின் அவர்களின் சீர்மையும் சிறப்பும் அகலும்.
|
|
Translation
|
|
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.
|
|
Explanation
|
|
If the good speak vain words their eminence and excellence will leave them.
|
|
Transliteration
|
|
Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|