|
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத
விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்.
இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
புறன் அழீஇப் பொய்த்து நகை - ஒருவனைக்காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.
அறனழித்தலினும் புறனழித்தலும் அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். ' அழீஇ' ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு
அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது
அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச்
செய்வதைவிடக் கொடுமையானது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறத்தை அறிந்தவனாகவே இருந்தும் அறிந்தே தவறு செய்கிறவனானாலும்) அறத்தினின்றும் நழுவி அறமல்லாதவற்றைச் செய்வதைவிட ஒருவன் இல்லாத இடத்தில்™ மறைவில் இருந்து கொண்டு ஒருவனைப் பற்றிப் பொய்யான கோள்களைச் சொல்லி மகிழ்வது கொடியது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய்வதைவிடத் தீமையானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறநெறிகள் ஒழிய ஒருவன் பாவச் செயல்கள் செய்து வாழ்தலினும், ஒருவர் இல்லாதபோது பழித்துப் பேசி நேரில் காணும் போது பொய்யாக நடித்து நகைத்துப் பேசுதல் தீதாகும்.
|
|
Translation
|
|
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.
|
|
Explanation
|
|
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
|
|
Transliteration
|
|
Aranazheei Allavai Seydhalin Theedhe
Puranazheeip Poiththu Nakai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|