|
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க ; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின்.
'விளைவயின்' வினைத்தொகை. அருமை இங்கு இன்மை மேற்று.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த
வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கருணை வாழ்க்கையுடன் இல்லறம் கெட்டுப் போவது மட்டுமன்றி) பிறருடைய பொருளைக் கவர்ந்து வருவதாகிய செல்வத்தை விரும்பக்கூடாது. ஏனெனில், அப்படிவரும் செல்வத்தின் பயனாக ஒருவனுடைய செல்வ நிலை உயர்ந்து விடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்பாதிருப்பார்களாக; அப்படிக் கவர்ந்ததால் அனுபவிக்கும்போது அதன் பயன் நன்மையுடையதாக இருக்காது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எந்தச் சூழலிலும் பிறர் பொருளைக் கவர்ந்திட நினைத்தலாகாது. அதன் விளைவுகள் தீவினை பயப்பதாய் அமையும்.
|
|
Translation
|
|
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.
|
|
Explanation
|
|
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
|
|
Transliteration
|
|
Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin
Maantar Karidhaam Payan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|