|
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்.
இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.
ஆனுருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. பிறன் மனையை விழையாதவனே உண்மையான இல்லறத்தான் என்றவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே
அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உலகத்தில் இல்லறம் ஒழுங்காக நடைபெறுதற்குப் பிறனில் விழையாமைதான் பிரதானம். ஆதலால்) இல்லற முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் யாரென்றால், இன்னொருவனுடைய இல்லறத்துக்காக வாழ்க்கைப்பட்டிருக்கிற பெண்ணின் காம இன்பத்தை விரும்பாதவனே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறமாகிய தன்மையுடன் இல்லறத்தில் வாழபவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பில் இருப்பவளது பெண்தன்மையினை விரும்பாதவனே ஆவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறவழி நின்று தன் துணையோடு இல்லற வாழ்வில் இசைந்து வாழ்பவன் எந்தச் சூழலிலும் பிறன் மனைவியை விரும்பாத ஒழுக்க சீலனாய் இருப்பான்.
|
|
Translation
|
|
Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.
|
|
Explanation
|
|
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
|
|
Transliteration
|
|
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal
Penmai Nayavaa Thavan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|