|
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.
|
|
மணக்குடவர் உரை:
|
|
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்து.) ( யானது தெளிவித்த வழித் தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிந்து செல்ல நான் இங்கிருப்பின் இவை நில்லா வென்னுங் குறிப்பில்தன் தோட்கடகங்களை நோக்கி ; மெல் தோளும் நோக்கி - அதற் கேதுவாக இவை மெலியு மென்னுங் குறிப்பில் தன் மெல்லிய தோள்களையும் நோக்கி ; அடி நோக்கி - அதன் பின் , இவ்விரண்டும் நிகழாமல் நீங்கள் காதலருடன் நடந்து சென்று காத்தல் வேண்டு மென்னுங் குறிப்பில் தன் பாதங்களையும் நோக்கி ; அஃது ஆண்டு அவள் செய்தது-இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள் . பிரிவுக் குறிப் புண்டாயின் செலவழுங்குவித்தல் இதன் பயனாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காதலி பேசாமல்) தளர்ந்த தன் கை வளையல்களைப் பார்த்து, மெலிந்து போன தன் கைகளையும் பார்த்ததும், தலைகுனிந்து தன் பாதங்களைப் பார்த்தாள். அவ்வளவே: அதற்கு மேல் ஒன்றும் செய்யவுமில்லை; சொல்லவுமில்லை.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன தோள் வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கி, தனது அடிகளையும் நோக்கி, அவ்வாறு அப்போது அவள் செய்தாள். அவள் செய்தது அவ்வளவேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கழலும் வளைகளைப் பார்த்து, மெலிந்த தோள்களைப் பார்த்து தலைவி தன் பாதங்களையும் பார்த்தாள். அஃதவளுடைய ஒரு குறிப்பேயாகும்.
|
|
Translation
|
|
She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.
|
|
Explanation
|
|
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
|
|
Transliteration
|
|
Thotinokki Mendholum Nokki Atinokki
Aqdhaan Tavalsey Thadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|