|
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்-அன்று விரும்பி உண்ணெகிழ்ந்து மேன்மேலுங் காதலித்து அவரைக் கண்ட கண்கள்; உழந்து உழந்து உள்நீர் அறுக-இன்று தூக்கமின்றி யழுந்துன்பத்தால் வருந்தி வருந்தி தம்மகத்துள்ள நீரெல்லாம் வற்றிப்போக! அடுக்கு இடைவிடாமை பற்றி வந்தது. சினைவினை முதல்மேல் நின்றதுபோல,அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அவரைப் பார்த்து ஆசை மூட்டி எனக்கு இவ்வளவு துன்பமுண்டாக்கிவிட்ட இந்தக் கண்கள் அழுது அழுது உள்ள நீரெல்லாம் அற்றுப் போகட்டும், எனக்கென்ன ?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மிகவும் விரும்பி மனம் நெகிழ்ந்துவிடாமல் அவரைக் கண்ட கண்கள் இன்று துயிலாமல் துன்பத்தில் உழன்று உழன்று உள்ளுக்குள் நீர் இன்றிப் போகட்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
விரும்பி, நெகிழ்ந்து அன்று காதலரைக் கண்டு காதலை வளர்த்த கண்கள் இன்று, வருந்தி வருந்தி அழுது கண்ணீர் வற்றி விட்டன.
|
|
Translation
|
|
Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.
|
|
Explanation
|
|
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.
|
|
Transliteration
|
|
Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu
Venti Avarkkanta Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|