|
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கடல் ஆற்றாக் காமநோய் செய்த என் கண்-கடலுஞ் சிறிதாம் வண்ணம் பேரளவுள்ள காமநோயை எனக்குச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும்-அத்தீவினையால் தாமும் தூக்கம் பெறாதனவாய்த் துன்பபப்படுகின்றன. வினைவிதைத்தவன் வினையறுப்பானாதலால், என்னைத் துன் புறுத்திய கண்கள் தாமும் துன்புறுகின்றன என்றாள்; காமநோய் காட்சியால் வந்ததனால், கண்ணே அந்நோயைத் தந்ததாகக் கூறினாள். கண் துன்புறுதலாவது அழுதலும் எரிச்சல் கொள்ளுதலும்.
|
|
கலைஞர் உரை:
|
|
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சமுத்திரத்தைவிடப் பெரிய காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்து விட்டு என் கண்கள் இமை மூடாமல் விழித்துக்கொண்டிருந்து தாம் துன்பப்பட்டுக் கொண்டிருக் கின்றனவே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கடலும் சிறிதாகி விடுமாறு பெரிதாகிய காம நோயினைச் செய்துவிட்ட எனது கண்கள் அத்தீமையான செயலால் தூக்கம் வராமல் துன்பத்தில் உழலுகின்றன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கடலைக் காட்டிலும் பெரிதாகக் காதல் நோய் தந்து இன்று அதனாலேயே துயில முடியாமல் கண்கள் துயர் உறுகின்றன.
|
|
Translation
|
|
The eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose.
|
|
Explanation
|
|
Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.
|
|
Transliteration
|
|
Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|