|
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கண்நின்று இரப்பவர் மேற்கொள்வது-வாய் திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லமாட்டாது ஒருவருக்கு முன் நிற்கும் நிலையினாலேயே இரக்கும் மானியர், தம் உயிரோம்பும் பொருட்டு இரத்தலை மேற்கொள்வது; கரப்பு இலார் வையகத்து உண்மையான்-தம்மிடத்துள்ள பொருளைக் கரவாது ஈயும் ஒருசிலர் உலகத்து இருப்பதனாலேயே. அத்தகையார் இல்லையெனின், தன்மானமுள்ள இரப்போரும் இறப்பர் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
இல்லையென்னாமல் கொடுப்பவர்கள் உலகத்தில் இருப்பதனால்தான் பிச்சை கேட்பவர்கள் ஆலோசனையில்லாமல் எல்லாரிடத்திலும் பிச்சை கேட்டுவிடுகிறார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உள்ளதை மறைக்காமல் கொடுப்பவர்கள் சிலர் உலகத்தில் இருந்து வருவதால்தான், முன்னின்ற மாத்திரத்தில் யாசிப்பவர் உயிர் காத்தற் பொருட்டு இரத்தலை மேற்கொண்டுள்ளார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உள்ளதை மறைக்காமல் உவந்தீயும் தன்மை உள்ளவர்கள் உலகத்தில் இருப்பதால் தான் ஏதும் இல்லாதோர் இரத்தலை மேற்கொள்கின்றனர்.
|
|
Translation
|
|
Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray.
|
|
Explanation
|
|
As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
|
|
Transliteration
|
|
Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru
Irappavar Merkol Vadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|