|
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நெருநலும் கொன்றதுபோலும் நிரப்பு-நேற்றும் வந்து என்னைக் கொன்றதுபோலும் துன்புறுத்திய வறுமை; இன்றும் வருவது கொல்-இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்! இதுமுந்தின நாள் அரும்பாடுபட்டுத் தன் வயிற்றை நிரப்பிய ஓர் இரப்போனின் இரங்கற் கூற்று. உம்மைகள் முறையே இறந்ததும் எதிரதும் தழுவிய எச்சம். ’கொல்’ ஐயம். ’ஓ’ இரங்கலிடைச்சொல். ’நிரப்பு’ மங்கல வழக்கு.
|
|
கலைஞர் உரை:
|
|
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி நீங்காத நித்திய தரித்திரம் உள்ளவனுக்கு ஒருநாள் போவது ஒரு மலையாக இருக்கும். அவன் தினந்தினம் எப்படி நடுங்குவானென்றால்) நேற்று வந்து என்னைக் கொன்று விடுவது போலத் துன்பப்படுத்திய தரித்திரம் இன்றைக்கும் வந்து விடுமோ (என்று ஏங்குவான்.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நேற்றும் கொன்றதைப் போன்று துன்பத்தினைச் செய்த நல்குரவு இன்றும் என்பால் வருகின்றதோ? வந்தால் யாது செய்வேன்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நேற்று வந்து கொல்வது போலும் துயர் தந்த வறுமை இன்றும் தங்கி இருந்து துன்பம் நல்குமோ?
|
|
Translation
|
|
And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?.
|
|
Explanation
|
|
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.
|
|
Transliteration
|
|
Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|