|
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒருவற்கு நல் ஆண்மை என்பது-ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொளல்-தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல். குடியாளுந் தன்மையாவது குடியிலுள்ள வரை முன்னேற்றித் தன் வயப்படுத்துதல். பேராண்மையினின்று வேறுபடுத்தற்கு ’நல்லாண்மை’ யென்றார். இவ்விரு குறளாலும் குடிசெய்வாரின் தலைமை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒருவனுக்குச் சிறப்புண்டாக்கும் வல்லமை என்று சொல்லத்தக்கது எதுவெனில், (குற்றமற்ற உழைப்பின் மூலம்) அவன்தான் பிறந்த குடும்பத்தை வலிமையுள்ளதாகச் செய்து கொள்வதே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது எதுவென்றால் தான் பிறந்த குடியிலுள்ள மக்களைத் தன்வயப்படுத்தி ஆளும் தன்மையினைத் தனக்கு உள்ளதாக்கிக் கொள்ளுதலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர்க்கு நல்லாண்மை எனப்படுவது யாதெனில் தான் பிறந்த குடும்ப நன்மைக்காக உழைத்து இல்லத்தின் ஆளுமையைத் தனதாக்கிக் கொள்ளல்.
|
|
Translation
|
|
Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.
|
|
Explanation
|
|
A man's true manliness consists in making himself the head and benefactor of his family.
|
|
Transliteration
|
|
Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha
Illaanmai Aakkik Kolal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|