|
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு-தம் குடியை யுயர்த்துதற்கேற்ற வினையைத் தவக்கமின்றி முயல்வார்க்கு; சூழாமல்தானே முடிவு எய்தும் -அம்முயற்சி அதற்கேற்ற சூழ்வினை வேண்டாது தானாகவே வெற்றியாக முடியும். தெய்வத்துணை யிருத்தலால், விரைந்த முயற்சி மட்டுமிருப்பின் எளிதாய் முடியும் என்பதாம். ’குடி’ ஆகுபொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்த நம்பிக்கையுடன்) தம்முடைய குடித்தனத்தின் உயர்வுக்கான முயற்சிகளைத் தளராமல் செய்துகொண்டேயிருப் பவர்களுக்கு அந்த நோக்கம் தடையின்றித் தானாகவே பூர்த்தியாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன் குடிமக்கள் உயரும் செயல்களைக் காலம் தாழ்த்தாமல் விரைந்து முயல்கின்றவர்களுக்கு, செயலினை முடிக்க ஆலோசிக்காமலேயே அத்தொழில் தானாகவே முடிவுறும் என்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன்குடியைத் தாங்குவதற்காக தளராமல் உழைப்பவர்களுக்கு இயல்பாகவே வெற்றி முன்வந்து நிற்கும்.
|
|
Translation
|
|
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.
|
|
Explanation
|
|
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.
|
|
Transliteration
|
|
Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith
Thaazhaadhu Ugnatru Pavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|