|
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குடிசெய்வல் என்னும் ஒருவற்கு-என் குடியை மேன்மேலுயர்த்தக் கடவேன் என்னும் பூட்கைகொண்டு, அதற்கேற்ற முயற்சியைச் செய்யும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்து உறும்-உதவி செய்யும் பொருட்டுத் தெய்வமும் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு முன் வந்து நிற்கும். சொல்லுதல் செயலையுந் தழுவிற்று. தறுதல் இறுகவுடுத்தல். ஒன்றைத் தப்பாது செய்து முடிப்பதாக உள்ளத்திற் பூணுதல் பூட்கை. குடிசெய்தல் வினை இறைவனுக்கும் இசைந்ததென்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்த உறுதி இருந்தால்) குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன் என்று உறுதிகொள்ளும் ஒருவனுக்குத் தெய்வம் தானாகவே வந்து கச்சை கட்டிக்கொண்டு உதவி செய்யும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
'என் குடியினை உயரச் செய்வேன்" என்று முயன்று செயல்புரியும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு தான் முன் நின்று துணை செய்யும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன் குடியை மேம்படச்செய்வதற்காக உழைக்கிறேன் என முன்வருவார்க்கு தெய்வம் தானே வந்து உதவி செய்யும்.
|
|
Translation
|
|
'I'll make my race renowned,' if man shall say,
With vest succinct the goddess leads the way.
|
|
Explanation
|
|
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.
|
|
Transliteration
|
|
Kutiseyval Ennum Oruvarkuth Theyvam
Matidhatruth Thaanmun Thurum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|