|
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒருவரால் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கால் - தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? மக்கள்,பொருள்,புகழ் என்னும் மூவகை யெச்சங்களுள், புகழே சிறந்ததாதலின் , ' என்னெண்ணுங் கொல்லோ ' என்றார். ஓகாரம் அசைநிலை. ' கொல் ' ஐயப் பொருளிடைச் சொல். 'படா.அ' இசைநிறை யளபெடை.இழிவு சிறப்பும்மை தொக்கது.
|
|
கலைஞர் உரை:
|
|
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(புண்ணியமும் புகழுந்தான் மனிதனுக்குச் சிறப் பளிப்பன. புண்ணியத்தை நம்பாவிட்டாலும் புகழையாவது தேட வேண்டும்) ஒருவராலும் விரும்பப்படாத உலோபி தனக்குப் பின்னால் உலகம் தன்னைப்பற்றி என்ன சொல்லும் என்பதைச் சிந்திப்பதில்லையே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஈதல் தன்மை இல்லாததால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்பதாக எதனை எண்ணுவானோ?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறரால் விரும்பப் படாமல் வாழ்ந்து மடிந்து போகும் ஒருவன் தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதை எண்ணுவான்?
|
|
Translation
|
|
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.
|
|
Explanation
|
|
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.
|
|
Transliteration
|
|
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|