|
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்புக்கொள்ளாது தமக்குத் தீமையே செய் தொழுகுவாரிடத்தும் ; பண்பு ஆற்றார் ஆதல் கடை -தாம் பண்புடையராயொழுகாமை அறிவுடையார்க்குக் கடைப்பட்ட குற்றமாம். தாமும் அவர் தன்மையராதலால் 'கடை ' என்றார். உம்மை இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பண்புடையவர்கள் தமக்குத் துன்பம் செய்துவிட்டவர் களுக்கும் இரக்கம் காட்டுவார்கள்.) தம்முடன் நட்பில்லாதவர் களாகத் தமக்குத் துன்பம் செய்கிறவர்களிடத்திலுங்கூடப் பண்புடையவர்கள் இரக்கமில்லாமல் நடந்துகொள்ளமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்முடன் நட்பு கொள்ளாமல் பகைமை யினைச் செய்து ஒழுகுவாரிடத்திலும் தாம் பண்புடைய வராக நடந்து கொள்ளாதிருத்தல் அறிவுடையார்க்குக் குற்றமேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நட்பு பாராட்டாமல் நன்றல்லாதன செய்வார்மாட்டும் பண்பு பாராட்டி பழகாமல் இருத்தல் நன்றன்று (இழிவாகும்)
|
|
Translation
|
|
Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.
|
|
Explanation
|
|
It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.
|
|
Transliteration
|
|
Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum
Panpaatraar Aadhal Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|