|
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கள் ஒற்றிக் கண்சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர்; உள் ஊர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூராரால் உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு எப்போதும் நகையாடப்படுவர். கள்வெறியினால் உணர் விழந்தவர் பொருள் விளங்காத தொடர்களை மட்டுமன்றி, நனவுக் காலத்தில் தம் உள்ளத்தில் மறைத்துவைத்திருந்தனவும் தமக்கு மாறானவும் தம்மைத் தாழ்த்து வனவுமான செய்திகளையும் வெளிவிடுவராதலின் , உள்ளொற்றியுள்ளூர் நகப்படுவர் என்றார். கள்ளைக்குடித்தால் உள்ளதைச்சொல்வான் . 'கள்ளைக்கொடுத்துக் கருமத்தை (காரியத்தை) அறி'. என்பன பழமொழிகள் .'உள்ளூர்' 'இலக்கணப்போலி'. 'ஊர்' 'கண்' ஆகுபெயர்கள். உண்டு என்பது அவாய்நிலையான் வந்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கள்ளைக் குடித்து நிதானமிழந்து கண் சுழலுகின்ற குடியர்கள் தினந்தினம் வீட்டுக்குள் குடித்தாலும் வீதிக்கு வந்து ஊருக்குள் பிறர் நகைக்க மானங் கெடுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கள்ளினை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்பவர் உள்ளூரில் வாழ்பவரால் உள் நிகழ்வது உய்த்துணரப்பட்டு எப்போதும் நகுதல் செய்யப்படுவார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மறைவாக அமர்ந்து மதுவருந்தி மயங்குபவர்கள், எந்நாளும் ஊரார் அறிய எள்ளலுக்கு ஆளாவர்.
|
|
Translation
|
|
Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.
|
|
Explanation
|
|
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
|
|
Transliteration
|
|
Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum
Kallotrik Kansaai Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|