|
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு.வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இகல் மேவல் இன்னா அறிவினவர்- மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்- வெற்றியொடு பொருந்தும் அரசியலுண்மைகளை அறியமாட்டார். 'மெய்ப்பொருள்' தப்பாது வாய்க்கும் நெறிமுறைகள். 'இன்னா அறிவு' தமக்கும் தம்மைச் சார்ந்தவர்க்கும் தீங்கு விளைக்கும் அறிவு. இகலால் அகக்கண் மங்குதலால் 'காணார்' என்றார். இவ்விருகுறளாலும் இகலினார்க்கு வருந் தீங்கு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) மனத்தாபம் கொண்டுவிட்டதனால் அறிவு கெட்டுப்போனவர்கள் அந்த மனத்தாபம் மிஞ்சும்போது கோபம் வந்துவிடுவதனால் எந்த விஷயத்திலும் உண்மையை அறிய முடியாத வர்களாகிவிடுகிறார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இசுலோடு சேர்ந்து ஒழுகுகின்ற துன்பமான அறிவினையுடையார் வெற்றியினைத் தருகின்ற நீதி நூற் பொருள்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மாறுபட்ட எண்ணங்களை உடைய பொருந்தாத அறிவினவர்கள் வாழ்வின் உண்மை நிலையை அறிந்து மேன்மையுற மாட்டார்கள்.
|
|
Translation
|
|
The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.
|
|
Explanation
|
|
Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
|
|
Transliteration
|
|
Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval
Innaa Arivi Navar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|