|
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பகை நட்பு ஆம் காலம் வருங்கால்- தம் பகைவர் தமக்கு நண்பரா யொழுகுங் காலம் வரின்; முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல் - தாமும் அவர்போல் முகத்தால் நட்புச் செய்து அகத்தில் அதைவிட்டு நீங்கிப் பின்பு வேண்டாதபோது புறநட்பையும் விட்டு விடுக. பகை நட்பாங் காலமாவது பகைவரை வெளிப்படையாக நீக்கமுடியாத காலம். இதனால், வேண்டும்போது பகைவரோடும் புறத்தளவில் தொடர்பு கொள்க என்பது கூறப்பட்டது. 'ஒரீஇ' இன்னிசையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பகைவன் நட்புக் கொண்டாட வருகிற சமயங்களில் முகத்தளவில் மட்டும் நட்புக் கொண்டாடி, மன நட்பாக நம்பிவிடுவதை நீக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவர்கள் தம்மிடம் நண்பராக நடந்து கொள்ளுகின்ற காலம் வந்தபோது அவர்களுடன் முகத் தினால் மட்டும் நட்பினைச் செய்து மனத்தினால் அவர்கள் நட்பினைத் தவிர்த்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகைவர்கள், நட்பு பூண்டு பழக முன்வருவாரேல், முகத்தளவிலே நட்பு கொண்டு அகத்தளவில் அதனைத் தவிர்த்திடல் வேண்டும்
|
|
Translation
|
|
When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
|
|
Explanation
|
|
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).
|
|
Transliteration
|
|
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|