|
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக்கெடுதல் இல்லை.
இது நாட்டு வளத்தையும் இல்லறத்தானின் செல்வநிலையையும் பொறுத்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன்
காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(விருந்தாளியை உபசரிப்பதால் யாரும் கெட்டுப் போக மாட்டார்கள்.) தினந்தினம் வருகிற விருந்தினர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிக்கின்றவனுடைய வாழ்க்கை அதனால் வறுமையுற்றுக் கெட்டுப் போகுமென்பது இல்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றுபவனுடைய இல்வாழ்க்கையானது வறுமையால் துன்புற்றுக் கெடுவது இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒவ்வொருநாளும் வருகின்ற விருந்தினரை உபசரித்து வாழ்பவர் தம் வாழ்க்கை எந்த சூழலிலும் துன்புற்று பாழ்படுவதில்லை.
|
|
Translation
|
|
Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.
|
|
Explanation
|
|
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
|
|
Transliteration
|
|
Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai
Paruvandhu Paazhpatudhal Indru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|