Thirukural

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.

நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.
தேவநேயப் பாவாணர் உரை:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும். எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது (Concession). கூடா நட்பினர் சொல்லளவில் நல்லவற்றையே சொல்வராதலின், எதிர்மறைப் பொருள் விளைவையே தழுவும். ஒல்லையுணரப்படுதலாவது நல்லவை தீயவையாக விரைந்து வெளிப்படல்.
கலைஞர் உரை:
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
சாலமன் பாப்பையா உரை:
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சிறிது கவனம் செலுத்தினால் பகைவர்கள் இனிமையாகப் பேசி நட்புக் கொள்ள வந்த நோக்கத்தைக் கண்டு கொள்ளலாம்.) நண்பர்களைப்போல நன்மைகளையே பேசினாலும் பகைவர் களுடைய பேச்சின் உட்கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நண்பர்கள் போல நன்மை பயக்கும் சொற் களைச் சொன்னாலும் பகைவர்களுடைய சொற்கள் சொல்லிய அப்பொழுதே அறிந்து கொள்ளப்படும்.
தமிழ்க்குழவி உரை:
நண்பர் போல் நல்லவற்றையே சொல்லினும் உள்ளத்தால் ஒன்று படாதவருடைய சொற்கள் உடன்பாடின்மையைக் காட்டிவிடும்.
Translation
Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known.
Explanation
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
Transliteration
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol Ollai Unarap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 826