|
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும். எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது (Concession). கூடா நட்பினர் சொல்லளவில் நல்லவற்றையே சொல்வராதலின், எதிர்மறைப் பொருள் விளைவையே தழுவும். ஒல்லையுணரப்படுதலாவது நல்லவை தீயவையாக விரைந்து வெளிப்படல்.
|
|
கலைஞர் உரை:
|
|
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சிறிது கவனம் செலுத்தினால் பகைவர்கள் இனிமையாகப் பேசி நட்புக் கொள்ள வந்த நோக்கத்தைக் கண்டு கொள்ளலாம்.) நண்பர்களைப்போல நன்மைகளையே பேசினாலும் பகைவர் களுடைய பேச்சின் உட்கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நண்பர்கள் போல நன்மை பயக்கும் சொற் களைச் சொன்னாலும் பகைவர்களுடைய சொற்கள் சொல்லிய அப்பொழுதே அறிந்து கொள்ளப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நண்பர் போல் நல்லவற்றையே சொல்லினும் உள்ளத்தால் ஒன்று படாதவருடைய சொற்கள் உடன்பாடின்மையைக் காட்டிவிடும்.
|
|
Translation
|
|
Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.
|
|
Explanation
|
|
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
|
|
Transliteration
|
|
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|