|
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.(நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முகம் நக நட்பது நட்பு அன்று-கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு-அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பதே உண்மையான நட்பாவது. இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. அகமும் முகமும் ஒருங்கே மலர்வதே நட்பென்றவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உணர்ச்சிகள் பொருந்தாமல் கூடிக் குலவுவதால் மட்டும் உண்டாகிற உறவு நட்பாகாது.) முகமும் முகமும் மகிழ்ந்து விடுவது மட்டும் நட்பாகி விடாது. நெஞ்சமாகிய அகமும் அகமும் ஒத்து மகிழும்படி பொருந்துகின்ற உறவுதான் நட்பு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சுண்டபொழுது மனத்தால் அல்லாமல் முகத் தினாலே மட்டும் மலர்ந்து நட்புச் செய்வது நட்பு ஆகாது. அன்பினால் மனமும் மலர நட்புச் செய்வதே நட்டி என்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
முகத்தில் மட்டும் நகையோடு பழகுவதன்று நல்லநட்பு, நெஞ்சத்தின் மலர்தலோடு ஒருவரிடம் பழகுவதே நல்லநட்பு.
|
|
Translation
|
|
Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near.
|
|
Explanation
|
|
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
|
|
Transliteration
|
|
Mukanaka Natpadhu Natpandru Nenjaththu
Akanaka Natpadhu Natpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|