|
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
விழித்தகண்-பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்தகண்; வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென் றெறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின்; வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ-அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தலாகுமன்றோ!. 'அழித்து' என்பது 'அழித்தழுதாள்' குறள் (1317) என்பதிற் போல நின்றது. 'ஒட்டு' தோற்றோடல். இங்கு ஓட்டென்றது ஓட்டாகக் கருதப்படுதலை. சிறந்த மறவர் தம் கண்ணுரத்தினால் முறுத்த நோக்கும் மறுத்த நோக்கார் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வேலைக் கொண்டு குத்தினாலும் அச்சமற்ற ஒரு வீரன், திறந்த கண்கைளைச் சிமிட்ட மாட்டான். அப்படிச் சிமிட்டுவதை, அவன் போரில் தோல்வி யடைந்து முதுகு காட்டி ஓடுவதற்குச் சமானமாகக் கருதுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவரைக் கோபித்து நோக்கிய கண், பகைவர் எறிந்த வேலைக் கண்டு பொறுக்காமல் இருக்குமா னால் அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகைவரைச் சினந்து பார்க்க, அவர் வேல் கொண்டு எறியுங்கால் கண்கள் இமைப்பினும் அது வீரத்திற்கு இழுக்காகும்.
|
|
Translation
|
|
To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spea
|
|
Explanation
|
|
Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?.
|
|
Transliteration
|
|
Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|