|
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எல்லாப் பொருளும் உடைத்தாய்- அரசனும் படைமறவரும் குடிகளுமாகிய அகத்தாரெல்லார்க்கும் வேண்டிய பொருள்களை யெல்லாம் உள்ளே கொண்டதாய்; இடத்து உதவும் நல் ஆள் உடையது- நொச்சிமறவர் புண்பட்டும் மடிந்தும் விழவிழ உடனுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்து பொருதுதவும் நன்மறவரை யுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது. அரசப்பத்தியும் நாட்டுப்பற்றும் மறமும் மானமும் ஊக்கமும் ஒருங்கேயுடைய மறவரை 'நல்லாள்' என்றார். எல்லாப் பொருளுமுடைமையால் நெடுநாள் முற்றுகையைத் தாங்குதலும், இடத்துதவும் நல்லாளுடைமையால் தோல்வியுறாது வெற்றுபெறுதலும், கூடுமென்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சண்டையோ முற்றுகையோ இல்லாத காலங்களிலுங் கூட) எல்லாத் தளவாடங்களும் உள்ளதாக, அந்தந்த வேலைக்கு அந்தந்த இடத்தில் இருக்க வேண்டிய பயிற்சிபெற்ற ஆட்களும் எப்போதும் உள்ளதாக இருப்பதுதான் கோட்டையாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உள்ளே இருப்பவர்கள் வேண்டும் பொருள்கள் எல்லாம் உடையதாகி புறத்தோரால் அழிவு உண்டாகும் போது அவ்வாறு உண்டாகாமல் காக்க வல்ல வீரரை உடையதே அரணாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எல்லாப் பொருட்களையும் தன்னகத்தே கொண்டு போர்க் காலங்களில் வீரர்களுக்குதவுகிற நல்லாண்மைமிக்க குடிமக்களையும் கொண்டு விளங்குவது அரண்.
|
|
Translation
|
|
A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.
|
|
Explanation
|
|
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).
|
|
Transliteration
|
|
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|