|
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கற்ற கற்றார்முன் செலச் சொல்லுவார்-தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்ற ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்; "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்-நலமிக்க பூம்புன லூர ! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்." (பழமொழி, 7). கற்றார் என்னும் சொல் பன்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணியாம்
|
|
கலைஞர் உரை:
|
|
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கற்றார் முன் அச்சமின்றிப் பேச்கூடியவர்கள்தாம் கற்றறிந்தார் சபையில் தாம் கற்றதைத் கற்றவர்கள்.) தடுமாற்றமின்றிச்சொல்லத் சபை ஏற்றுக்கொள்ளும்படி தெரிந்தவர்களே கற்றவர்களால் கற்றவராக மதிக்கப்படுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கற்றவர்கள் இருக்கும் அவையில் (சபையில்) அஞ்சாமல் தாம் கற்றவற்றைச் சொல்ல வல்லாரைக் கற்றார் எல்லோரையும்விட 'இவர் நன்கு கற்றவர்' என்று உலகத்தார் சொல்லுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சுற்றோர் அவையிலும் கற்றவர் எனப்படுபவர். கற்றவர்கள் முன் தான் கற்றவற்றை அவர்கள் அறிந்து கொள்ளுமாறு பேசும் திறனுடையவரே.
|
|
Translation
|
|
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.
|
|
Explanation
|
|
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
|
|
Transliteration
|
|
Katraarul Katraar Enappatuvar Katraarmun
Katra Selachchollu Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|