|
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்ல அறிஞரவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்ல வல்லார்; புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அறிஞரில்லாச் சிறியோ ரவைக்கண் அவற்றை மறந்துஞ் சொல்லாதிருக்க. சொல்லின், பன்றிக்குமுன் முத்தைப் போடுதலென்று நல்லவையும், பொருள் விளங்காமையிற் புல்லவையும் பழித்தலால் , இருசாரார்க்கும் ஆகாமை கருதிப் 'பொச்சாந்துஞ் சொல்லற்க' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால் கல்வி யறிவும் உணருந்தன்மையும் உள்ளவர்கள் நிறைந்த) நல்ல சபையோர் மெச்சும்படி கல்வி யறிவோடு பேசத் தெரிந்தவர்கள், கல்வியும் உணர்ச்சியும் குறைவான கூட்டங்களில் அந்தக் கல்வித் திறமுள்ள பேச்சை மறந்தும் பேசி விடக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்லார் இருந்த அவையில் நல்ல பொருட் களை அவர் மனங்கொள்ளுமாறு சொல்லுதற்குரியவர், புல்லர்கள் இருந்த அவையில் அவற்றை மறந்தும் சொல்லா திருத்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்ல அறிஞர்கள் இருக்கும் அவையில் நன்கு பேசுவோர் புல்லறிவாளர்கள் மத்தியில் மறந்தும் பேசக் கூடாது.
|
|
Translation
|
|
In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.
|
|
Explanation
|
|
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.
|
|
Transliteration
|
|
Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul
Nankusalach Chollu Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|