|
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க. உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குறிப்பின் குறிப்பு உணராவாயின்-பிறர் முகத்திலும் முகவுறுப்புகளிலுமுள்ள குறிப்புகளைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புக்களைக் காணமாட்டாதனவாயின்;உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒவ்வொரு புலனுக்கும் ஒவ்வொன்றாகவுள்ள ஐம்புல வுறுப்புகளுள், காட்சியையே தம் புலனாகக் கொண்ட கண்கள் வேறென்ன பயன்படுவனவாம்? 'குறிப்பு' இரண்டனுள், முன்னது தோற்றமாகிய புறக்குறிப்பு; பின்னது கருத்தாகிய அகக்குறிப்பு. இரண்டும் தொழிலாகு பெயர். குறிப்பறிதற்கு இன்றியமையாத கருவியாதல்பற்றி, அறிவான் உணர்வு அவன் கண்ணாகிய உறுப்பின்மேல் ஏற்பட்டது. என்ன பயத்தவோ என்னும் வினா, ஒரு பயனுமில்லை யென்னும் விடையை வேண்டி நின்றது. இவ்விரு குறளாலும் குறிப்பறியமாட்டாரது இழிவு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒருவன் முகத்தைக்) குறிப்பாகப் பார்த்தவுடனேயே அவனுடைய நோக்கத்தைக் கண்டுகொள்ள முடியாவிட்டால் உடலின் உறுப்புகளில் கண்கள் இருந்து பயனென்ன?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குறித்ததைக் காணவல்ல தம் பார்வையால் பிறர் குறிப்பினை உணரவில்லையானால் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வனவாகும்?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருடைய முகம் பார்த்தே அவர் தம் உள்ளக் கருத்துக்களை அறிந்து கொள்ள முடியாதவர்களுக்கு தம் கண்களால் யாது பயன்?
|
|
Translation
|
|
By sign who knows not sings to comprehend, what gain,
'Mid all his members, from his eyes does he obtain?.
|
|
Explanation
|
|
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another?.
|
|
Transliteration
|
|
Kurippir Kurippunaraa Vaayin Uruppinul
Enna Payaththavo Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|